மிழ்ப்புத்தாண்டான சித்திரை மாதப்பிறப்பு 14.4.2019 ஞாயிற்றுக் கிழமை பகல் 1.07 மணிக்கு கடக ராசியில் பிறப்பதாக பஞ்சாங்கம் தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு பிறக்கும் தமிழ்ப்புத்தாண்டு  விகாரி வருடம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த விகாரி ஆண்டு எப்படி இருக்கும் என தமிழ் புத்தாண்டு பஞ்சாங்க கணிப்புபடி பார்க்கும் போது,  வருகிற 2019 ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வெயில் வாட்டியெடுக்கும் என்பது தெளிவாகிறது. கோடை வெப்ப புழுக்கம் மிக அதிக அளவில் இருக்கும் என கிரக நிலைகள் தெரிவிக்கின்றன.

அதுபோல  தமிழ் ஆண்டின் அதிபதியாக சனி பகவான் வருவதால் புயல் காற்றுடனான மழை பரவலாக பெய்யும் என்றும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் அறிவுறுத்தி உள்ளது.

விகாரி வருடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் என்னென்ன பலன்கள் உள்ளது என்பது குறித்து பிரபல ஜோதிடர் திருமதி வேதா கோபாலன் எளிமையாக அனைவரும் புரியும் வகையில் நமது பத்திரிகை.காம் வாசகர்களுக்காக கணித்துள்ளார். வாசகர்களே நீங்கள் உங்கள் ராசிக்கான  பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.

மேஷம்  

 சருமப் பிரச்சினை முதல் அறுவை சிகிச்சை வரை எல்லாமும் பார்த்து.. போதும்டா சாமி என்ற நிலைக்குப் போய் விட்டாலும் மெல்ல  மெல்ல மீண்டு வருவீங்க. குழந்தைகளுக்கு சுப நிகழ்ச்சி உண்டுங்க. கலைத்துறை யில் உள்ளவங்களுக்கு நல்ல காலம் வந்தாச்சு.

2019 அக்டோபர் முதல்

அசல் பொற்காலம் இப்போது முதல் துவங்குகிறது.  முன்பு பல முயற்சிகளுக்குப் பின் வெற்றி தாமதமானது. இப்போது சிறு முயற்சிகள் பெருவெற்றி அளிக்கும். சகோதர சகோதரி களுடன் இருந்து வந்து சண்டைகளுக்கு  ஃபுல்  ஸ்டாப் வெச்சுடுவீங்க.                                                ரிஷபம்

அதிகமாகக் கோபம் வருவது போன்ற சந்தர்ப்ப சூழ்நிலைகள் அமைந்தா லும் நீங்கள் பொறுமையாக அனுசரித்துப் போய்விட்டால் எல்லாம் சரியாயிடுங்க. அரசியல்வாதிகளுக்கு அதிக நன்மையும் ஆதாயமும் வெற்றியும் கிடைக்கும்.

2019 அக்டோபர் முதல்

சின்னச்சின்ன ஆரோக்யப் பிரச்சினைகளை எண்ணிக் கலங்க வேண்டாம். அவை காலைப் பனி போன்றவை. சீக்கிரம் காணாமல் போய்விடும். பேச்சினால் இத்தனை காலம் ஏற்பட்டு வந்த பிரச்சினைகள் அப்படியே நேர் எதிராகத் திரும்பி இப்போ வெற்றியும் நல்ல பெயரும் கொடுக்கும்.

மிதுனம்

ஆன்மிகத் துறையில் உள்ளவர்களுக்கு அதிக அளவு புகழும் நன்மையும் கிடைக்கும். தேவையற்ற சோம்பல் உடம்பிலும் மனசிலும் புகுந்து ஆட்டி வைக்கும். அவற்றை மதிக்காமல் புறந்தள்ளுங்கள். சாமி கோயில் என்று பயணங்கள் போவீங்க.

2019 அக்டோபர் முதல்

திருமணம் நிச்சயமாகும். பிரிஞ்சிருந்த கணவன் மனைவி ஒண்ணு சேருவீங்க. திடீர்ப் பணவரவும் லாபமும் கிடைக்கும். ஆன்மிக சிந்தனைகள் அதிகமாகும். கெட்டவழியில் பணம் சம்பாதிக்க உங்களை ஊக்குவித்த நண்பர்கள் (!) காணாமல் போவாங்க. நல்லதுதானே!

கடகம்

கடன்களை அடைப்போமோ மாட்டோமோ என்று அஞ்சிக் கொண்டிருந் தீங்களே? இப்பப் பார்த்தீங்களா? நீங்க எதிர்பார்த்ததைவிடவும் கௌரவ மாயும் வேகமாயும அடைச்சுக்கிட்டே வறீங்க///. கங்கிராட்ஸ். அந்த விஷயத்தில உங்க மனசை யாரும் மாத்த அனுமதிக்காதீங்க

2019 அக்டோபர் முதல்

அருமையான நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். அவர்கள் உங்கள் வாழ்வையே திசை திருப்புமளவுக்கு நன்மைகள் செய்வார்கள். ஓரிரண்டு துரோகிகளை இனம் கண்டு கொள் வீர்கள்.  வியாபாரிகளுக்கும் அலுவலகவாசிகளுக்கும் நல்ல முன்னேற்றம் இருக்கும். என்றைக்கோ செய்த சில நன்மைகள் இன்றைக்கு நற்பலன் அளிக்கும்

சிம்மம்

நடக்குமா நடக்குமா என்று காத்திருந்தீங்களே.. அந்த நன்மைகள் இதோ நடக்கப்போகுதுங்க.  குறிப்பாய் தாயாருக்கு நன்மைகள் நிகழும்.  மாணவர்களுக்கு திடீர் உந்துதலால் கல்வியில் சிறப்பு ஏற்படும். புதுசா வாகனம் வாங்குவீங்க

2019 அக்டோபர் முதல்

மகள்/ மகன் திருமணம் அல்லது கல்வி பற்றி நீங்க மனசில் அலையடிக்க டென்ஷனுடன் இருந்ததெல்லாம் இனி மாறும். புண்ணியச் செயல்கள் அதிகம் செய்வீங்க. பழைய கவலை கள் ஒவ்வொன்றாய் அர்த்தமற்றதாகிவரும். நிம்மதிப்பெருமூச்சுடன் சோபாவில் சாய்ந்து புன்னகைக்கும் காலம் வந்தாச்சுங்க.

கன்னி

ஒன்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வாங்குவீங்க. தந்தைக்கு நன்மைகள் நிகழும். அலுவலகத்தில் எதிர்பார்த்ததைவிட கௌரவம் அதிகரிப்பதுடன் சம்பளமும் கூடும். வெளியூர் மற்றும் வெளிநாட்டுக்கு மாற்றலாவதற்கு ஆசைப்பட்டிருந்தவங்களுக்கு அந்த எண்ணம் நிறைவேறும்.

2019 அக்டோபர் முதல்

அம்மாவுக்கு நன்மையும் அம்மாவால் நன்மையும் ஷ்யூராய் உண்டுங்க. மாணவர்களுக்குப் படிப்பின்மீது அக்கறை உண்டாகும். குறிப்பாய் மேல்படிப்பு பற்றி நீங்கள் மட்டுமின்றி உங்க குடும்பமே டென்ஷனாயிருக்கும். அந்த நிலை மாறி நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும் அளவுக்குக் கல்வி பற்றிய கவலைகள் மாறும்.

(துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் நாளை வெளியாகும்….)