சென்னை: தமிழ்நாடு வக்ஃப் வாரியம் மற்றும்  நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கான தேர்தல் தேதியை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்துப் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்‘ கூறியிருப்பதாவது,

“தமிழ்நாடு வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலுக்கு, பாராளுமன்ற முஸ்லிம் பிரிவுக்குப் பின்வரும் தேர்தல் கால அட்டவணை, 03.12.2021 நாளிட்ட தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியீட்டில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கல் செய்தல் 06.12.2021 (திங்கட்கிழமை) (முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை),

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 08.12.2021 (புதன்கிழமை) (பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர்),

வேட்பு மனு சரிபார்த்தல் 09.12.2021 (வியாழக்கிழமை) (பிற்பகல் 1.00 மணிக்குள்)

வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் 10.12.2021 (வெள்ளிக்கிழமை) (பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர்)

வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் நாள் 13.12.2021 (திங்கட்கிழமை)

தேர்தல் அவசியமானால், 15.12.2021 (புதன்கிழமை) அன்று ஓட்டுப் பதிவு காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை,

தமிழ்நாடு வக்ஃப் வாரிய அலுவலகம், நெ.1. ஜாபர்சிராங் தெரு, வள்ளல் சீதக்காதி நகர், சென்னை-600 001-ல் நடைபெறும். 16.12.2021 (வியாழக்கிழமை) அன்று தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.