சென்னை: தமிழ்நாடு அரசின் அடுத்த சட்டப்பேரவைத் தொடர் ஜார்ஜ் கோட்டையில்   நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்,  கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில்  கலைவாணர் அரங்கத்திலேயே நடத்தப்பட்டது. இதையடுத்து, ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றும், பட்ஜெட் கூட்டத்தொடர் வரை கலைவாணர் அரங்கிலேயே நடத்தப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால், மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடர், ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டமன்ற பேரவை யில் நடத்த தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான ஆயத்தப் பணிகள்  நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ.க்களுக்கு கணிணி பொருத்தும் பணிகளும் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும் என நம்பப்படுகிறது.