சென்னை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் இன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், 2ம் நிலைக் காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வானது கடந்தாண்டு டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதனை https://www.tnusrbonline.org/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் https://www.tnusrbonline.org/pdfs/candidates_eligible.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.