Skip to content
  • Sat. Jul 11th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக மூதலீடுகளை பெற்றதில் தமிழகம் முதலிடம்..

Jul 16, 2020

சென்னை:

கொரோனா  ஊரடங்கால் தொழில்நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த காலக்கட்டத்தில்  நாட்டிலேயே அதிக புதிய முதலீடுகளை பெற்று தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக தனியார் நிறுவன திட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


மும்பையில் உள்ள ‘புராஜக்ட்ஸ் டுடே’ என்ற திட்ட கண்காணிப்பு அமைப்பு ஒன்றின் ஆய்வறிக்கை யின்படி, ஊரடங்கு நிலவும் ஏப்ரல் முதல் ஜூன் மாதங்களின் இடைக்காலத்தில் ரூ.97 ஆயிரத்து 859 கோடி முதலீடுகளுக்கான 1,241 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிய வந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.  இதனால் அனைத்துப் பணிகளும் முடங்கிய நிலையில், மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறி யாகி உள்ளது. பெரும்பாலான தொழில்நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. சிறுவணிகர்களின் தொழில் அடியோடு நசுங்கிவிட்டது. கோடிக்கணக்கானோர் வேலையிழந்து அல்லல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பல மாநிலங்களில் மீண்டும் பொருளாதார எழுச்சி பெறும் வகையில் பல்வேறு தொழில்சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, நாட்டிலேயே அதிக முதலீடு பெற்ற மாநிலமாக தமிழகம் அறியப்பட்டுள்ளது.
 ‘புராஜக்ட்ஸ் டுடே’ என்ற திட்ட கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வடறிக்கை..
நாட்டிலேயே அதிக முதலீடுகளை பெற்ற  மாநிலங்களில் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. தமிழக அரசு சமீபத்தில் ரூ.18 ஆயிரத்து 236 கோடி முதலீடுகளுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு முதலிடம் பிடித்துள்ளது.
2வது இடத்தை மகாராஷ்டிரா மாநிலம் பிடித்துள்ளது. ரூ.11 ஆயிரத்து 229 கோடி அளவுக்கு புதிய முதலீடுகளைப் பெற்றுள்ளது.
அடுத்தபடியாக உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட், தெலுங்கானா, குஜராத், ஒடிசா, ஆந்திர பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் வருகின்றன.
கடந்த ஆண்டு இதே மாதங்களில் ரூ.3 லட்சத்து 86 ஆயிரத்து 673 கோடி மதிப்புள்ள முதலீடுகளுக்கான 2,500 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
“அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களில் பெரும்பாலானவை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் திட்டங்கள் என்றாலும், ஒரு சில தனியார் திட்டங்களும் உள்ளன, இது மார்ச் 2020 முதல் நாடு பூட்டப்பட்ட நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு சாதகமான அறிகுறியாகும்.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post navigation

தமிழக பா.ஜ.க.வில் மேலும் பல சினிமா பிரபலங்கள்..
பிளஸ்2 மறுதேர்வு எழுத-மறுகூட்டல் விண்ணப்பிப்பது எப்போது?

Related Post

தமிழ் நாடு

எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு… பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் சட்டமன்ற தற்காலிக சபாநாயகர் மு.வீ.கருப்பையா…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும்! காங்கிரஸ் போராட்டத்தில் வலியுறுத்தல்…

2026 TN ASSEMBLY ELECTION தமிழ் நாடு

திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தீவிர ஆலோசனை

உலகம்

உலகம் விளையாட்டு

“Red Card” முதல் “Trump Card” வரை… கால்பந்து போட்டிகளில் பின்பற்றப்படும் கார்டுகளும் அவற்றின் வரலாறும் விதிமுறைகளும்…

July 10, 2026 Sundar
உலகம்

அடுத்த 25 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு இரட்டிப்பாகலாம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

July 10, 2026 Sundar
உலகம்

“மீண்டும் கப்பல்களைத் தாக்கினால் இன்னும் பலமாக அடிப்போம்!” – ஈரானுக்கு டிரம்பின் வழக்கமான எச்சரிக்கை

July 9, 2026 Sundar
உலகம்

ஈரான் தாக்குதல் அச்சம்: கத்தார் பரிசாக வழங்கிய விமானத்தில் பயணம் செய்வதைத் தவிர்த்த டிரம்ப்

July 9, 2026 Sundar
இந்தியா உலகம்

VFS மையங்களில் விசா விண்ணப்பங்களை செயல்படுத்துவதில் முறைகேடு?

May 28, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer