சென்னை:
மிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை தீவரமாக்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்றும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக வார இறுதி நாட்களில் வழிப்பாட்டு தலங்களுக்கு அனுமதி இல்லை, கடைகளின் நேரத்தை குறைப்பது, இரவு நேர ஊரடங்கு, ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.