சென்னை:

மிழகத்தில் இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் கலந்தாய்வு நடைடெபறு கிறது.

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு (நீட் தேர்வு)  முடிவு கடந்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி வெளியானதும், மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்கள் வரவேற்கப்பட்டது.  அதன்படி கடந்த 7-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், மாணவ- மாணவிகள் தங்களுடைய சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்ப கடந்த மாதம் 22-ந்தேதி வரை அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான தரவரிசை பட்டியல்  கடந்த வாரம்  வெளியானது.

இதையடுத்து நாளை இன்று (ஜூலை 8) கலந்தாய்வு தொடங்குகிறது.

8-ந் தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இன்று நடைபெறும் கலந்தாய்வில் மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் விளையாட்டு பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்கின்றனர்.*

நாளை,  9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.

தமிழகத்தில்உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 3250 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. மருத்துவப் படிப்புகளுக்காக அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 58756 பேர் விண்ணப்பித்துள்ளனர்.