சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்றும் டிசம்பர் 27ந்தேதி மற்றும் டிசம்பர் 30ந்தேதி நடைபெறும் என்று  மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்து உள்ளார். வாக்கு எண்ணிக்கை  2020ம் ஆண்டு ஜனவரி 2ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல்  ஊரகப்பகுதிகளுக்கு மட்டுமே. மாநகராட்சி, நகராட்சி போன்ற பகுதிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

தேர்தல் நடத்தை விதிகள் இன்றுமுதல் அமலுக்கு வருவதாக அறிவித்து உள்ளது.

வேட்புமனு தாக்கல் : டிசம்பர் 6-ம் தேதி 

வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் : டிசம்பர் 13-ஆம் தேதி 

தேர்தல் வாக்குப்பதிவு: டிசம்பர் 27 மற்றும் 30ந்தேதி

வாக்கு எண்ணிக்கை.: ஜனவரி 2-ம் தேதி 

மேயர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல்:  ஜனவரி 11-ஆம் தேதி

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை… நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.

கிராம உள்ளாட்சித் தேர்தல் வழக்கம்போல் வாக்குசீட்டு முறையில் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்கட்ட தேர்தலில் 33,698 வாக்கு இயந்திரம், 2ம் கட்ட தேர்தலில் 32, 092 இயந்திரம் பயன்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி தலைவர் உள்பட 1.50 லட்சம் உள்ளாட்சி பதவிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2016 முதல் தேர்தல் நடத்தப்படவில்லை. மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகின்றனர்.

அதேநேரத்தில் தேர்தலை தடுத்து நிறுத்தும் வகையில் தி.மு.க. உள்பட சில தரப்பில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் அடுத்தடுத்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதனால் உள்ளாட்சி தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையிலும், ஏற்கனவே உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி, தேர்தல் அறிவிப்பை வெளியிட மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டு உள்ளது.