சென்னை:

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடக்குகிறது. இந்த கூட்டத்தில் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் உள்பட தமிழக பிரச்சினை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று தொடங்கும் மானிய கோரிக்கைகளுக்கான  சட்டமன்ற கூட்டத்தொடர் ஜூலை 31ந்தேதி வரை  நடத்த சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 23 நாட்கள் சட்டமன்றம் செயல்படும்.

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் துணைமுதல்வர் மற்றும் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தால் தாக்கப்பட்டது. அதன்மீது சுமார் ஒரு வாரம் மட்டுமே விவாதங்கள் நடைபெற்ற நிலையில், மானிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்காமலேயே லோக்சபா தேர்தல் காரணமாக சட்டமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது மானிய கோரிக்கை தொடர்பான விவாதங்கள், அதற்கான துறை ரீதியான நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெறும் வகையில் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் இன்று தொடங்கி உள்ளது.

இன்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை ஒத்தி வைக்கப்படும்.  அதைத்தொடர்ந்து மீண்டும் திங்கட்கிழமை (ஜூலை 1) சட்டமன்றம் கூடுகிறது. அன்றைய தினம் திமுக கொடுத்துள்ள்ள சபாநாயகர் மீதான நாம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.