சென்னை,
மிழக அரசியல் சூழலை கவர்னர் வித்தியாசாகர் உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு தெரிவித்திருக்கிறார்.

தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், ஆளுநர் வித்தியாசாகர் தமிழகத்துக்கு வருவதை ஒத்திவைத்துக்கொண்டே இருக்கிறார். எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்தார் .

அப்போது அவர், “ஆளும்கட்சி குறித்து நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. கவர்னர் நடவடிக்கை குறித்து யாரும் விமர்சிக்க தேவையில்லை” என்று தெரிவித்தார்.

மேலும். அவர், “கவர்னர் வித்தியாசாகர் தமிழக அரசியல் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகிறார். உரிய நேரத்தில் சட்டப்படியான நடவடிக்கையை அவர் எடுப்பார்” என்றும் தெரிவித்தார்.