சென்னை,

தித்திக்கும் தீபாவளி திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும் நலமும், வளமும் பெருகட்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தீபாவளி பண்டிகையையொட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

ஆளுநர் பன்வாரிலால் 

தூய்மையான மற்றும் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்ற இந்த தீபத்திருநாளில் உறுதியேற்போம்.  தீயவை அகன்று இந்த நாள் மக்களிடையே அன்பையும், சகோதரத்துவத்தையும் வலுப்பெற செய்யப்பட்டும் என ஆளுநர் பன்வாரில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

தித்திக்கும் தீபாவளி திருநாளில் மக்கள் அனைவரது வாழ்விலும், நலமும், வளமும் பெருகட்டும்.  இருள் அகன்று, மகிழ்ச்சி ஒளிச்சுடர் பரவட்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.