சென்னை:
சென்னை-தமிழக அரசு சார்பில் தமிழ்நாடு தினம்  நாளை கொண்டாடப்பட உள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில், நாளை காலை 11.30 மணிக்கு நடக்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இவ்விழாவில் கருத்தரங்கம், குறுப்படம் திரையிடம் ஆகியவை நடைபெற உள்ளது. இலக்கிய மாமணி, கபிலர் விருது, உ.வே.சா விருது உள்ளிட்ட பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. கீழடி உள்ளிட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களும் இவ்விழாவில் காட்சிப்படுத்தப்படுகிறது.