சென்னை:
பிரதமர் துவக்கி வைப்பதால் செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிக்க தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்த முயற்சிகளை பாராட்டுகிறது.

இந்த போட்டியை பிரதமர் துவக்கி வைப்பதால் போட்டியை புறக்கணிக்க தமிழக காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக கூறினார்.

இந்த புறக்கணிப்பு பிரதமருக்கு எதிரானதே தவிர செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு எதிராக அல்ல என்றும், மக்கள் விரோத ஜனநாயக விரோத செயல்பாடுகளுக்கு மத்திய அரசு துணை போவதை கண்டித்து செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணிக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.