சென்னை:
மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்துக்கும் அண்டை மாநிலமான கர்நாடகாவுக்கும் இடையே காவிரி நதிநீரை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த பிரச்சினைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை.

தென்பெண்ணையாற்றில் கர்நாடக அரசு புதிய அணை கட்டி உள்ளதால் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் பாசனம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுதவிர காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாதுவில் புதிதாக அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த திட்டத்திற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.