சென்னை: காலியாக உள்ள தமிழ்நாடு தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் ஆளுநரின் ஒப்புதலை பெற்று அரசிதழில் வெளியிடப்படும்.

தமிழ்நாட்டில் தலைமை தகவல் ஆணையர், நான்கு தகவல் ஆணையர்களின் பதவியிடங்கள் காலியாக உள்ளது. தகவல் ஆணையர்கள் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதிவாய்ந்தவர்களின் பட்டியலை அதனை தயார் செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் அலி முதலமைச்சரிடம் வழங்கி உள்ளார்.

இந்த நிலையில், தகவல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட பெயர்கள் ஆளுநரின் ஒப்புதலை பெற்று அரசிதழில் வெளியிடப்படும். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக உள்ள இறையன்புவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் அவரும் தலைமை தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.