சென்னை:  ஆதாருடன் வாக்காளர் அட்டை இணைப்பு தொடர்பாக, தமிழ்நாட்டில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை மறுநாள் (ஆகஸ்டு 1ந்தேதி) ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்யும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆகஸ்டு 1ந்தேதி ஆலோசனை நடத்துகிறார்

தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளபடி,  வாக்காளர்கள் தாமாக முன்வந்து தங்கள் ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துக்கொள்ளலாம். இதற்காக   படிவம்-6T- அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த படிவத்தை  பூர்த்தி செய்து, வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடி அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணை இணைத்து கொள்ளலாம்.