சென்னை:
ரும் ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் தமிழ்நாடு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2022-23ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை மாநில நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் பதினெட்டாம் தேதி தாக்கல் செய்தார். தமிழ்நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு முந்தைய அதிமுக ஆட்சியின் முதல் பகுதி பட்ஜெட்டைத் தொடர்ந்து பிந்தைய பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

இந்நிலையில், வரும் ஏப்ரல் 9, 10-ம் தேதிகளில் தமிழ்நாடு பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் நடக்கும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  பங்கேற்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.