சென்னை:

மிழக அரசின் 2018-19ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை துணை முதல்வர் ஓபிஎஸ் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.

வரியில்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டு வரும் இன்றைய பட்ஜெட்டில், ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீடான,  வேதா நிலையம் என்ற  இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 20 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்திருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.