சென்னை: தமிழக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து எல்.முருகன் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனாவின்  வேகம் தீவிரமடைந்துள்ளது. இதனால் தினசரி 5ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்

இந்த நிலையில்,  பாஜக மாநில தலைவர் எல்.முருகனின் இளைய மகன் இந்திரஜித்துக்னகு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, மாநிலவ தலைவர் எல்.முருகன்  தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  மேலும்,  முருகன்,  அவரது மனைவி மற்றும் மூத்த மகனுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப் பட்டதாகவும், ஆனால், வேறு யாருக்கும் தொற்று  இல்லை என்று முடிவுகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.