சென்னை: தமிழ்நாடு ஆதி திராவிடர்-பழங்குடியினர் நல ஆணையம்’ என்கிற புதிய அமைப்பினை உருவாக்குதல், சாதி வேறுபாடற்ற மயனாங்கள் உள்ள சிற்றூர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் உள்பட அறிவிப்புகளை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110ன்கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம்  13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறதுஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள்  மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்று பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை, சட்டம், போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானிய கோரிக்கைகள், அதுதொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக இன்று காலை சிஏஏ சட்டத்துக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, விதி எண் 110ன்கீழ், முதல்வர் ஸ்டாலின் ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டார்.  அதன்படி,

மாநில அளவில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் உரிமைகள் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு தீர்வுகாண “ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்” தன்னாட்சி அதிகாரத்துடன் உருவாக்கப்படும்

வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவான வழக்குகளை விரைந்து விசாரிக்க 4 கூடுதல் நீதிமன்றம் உருவாக்கப்படும் அதன்படி, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை நெல்லை ஆகிய மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்ச சிறப்பு தொகை பரிசாக வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், பள்ளிக்கல்வித்துறை தலையிடாது உள்பட ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.