சென்னை:

டப்பு ஆண்டுக்கான  தமிழ் இணைய மாநாடு 2019, வரும் செப்டம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது, பன்னாட்டு நிறுவனமான உத்தமம் நிறுவனமும் அண்ணாப் பல்கலைக்கழகமும் இணைந்து செப்டம்பர் மாதம் 20-22, 2019 தேதிளில் 18வது தமிழ் இணைய மாநாட்டைச் சென்னையில் அண்ணாப் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்துவ தென முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் மாநாட்டின் புதிய அம்சம், தமிழில் என்.எல்.பி-அடிப்படையிலான பயன்பாடுகள் குறித்த ஹேக்கத்தான்  போட்டி  (Hackathon Competition ) மற்றும் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் தமிழில் பயன்பாடுகளை உருவாக்க உதவும் கருவிகள் மற்றும் சாட்போட் ஏபிஐக்கள் தொடர்பான முந்தைய மாநாட்டு டுடோரியல் பட்டறை (மாநாடு) நடைபெற உள்ளது.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஐ.எஸ்.டி துறை, பொறியியல் கல்லூரி (சி.இ.ஜி), அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஹேக்கத்தான் போட்டி நடைபெற உள்ளது. மாநாட்டின் போது மூன்று சிறந்த கட்டுரைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். ஆயத்த முன்-மாநாட்டு டுடோரியல் பட்டறையில் பங்கேற்க முடியாத / பங்கேற்காதவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்கும் ஹேக்கத்தான் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாநாட்டின் 3 முக்கிய அரங்கங்கள் :

1. மாநாட்டுத் தொழில்நுட்ப அரங்கம் 
2. மாநாட்டு மக்கள் அரங்கம் 
3. மாநாட்டுக் கண்காட்சி அரங்கம்

இந்த தகவலை  செய்தியாளர் கூட்டத்தில் உத்தமம் நிறுவனத்தின் தற்போதைய தலைவர் சிங்கப்பூரைச் சார்ந்த திரு. எஸ். மணியம் அவர்களும் அண்ணாப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சூரப்பா அவர்களும் அறிவித்தனர்.

ஏற்கனவே தமிழ் இணைய மாநாடு உலகெங்கிலும் உள்ள பலநாடுகளில் நடைபெற்று வருகின்றன. சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மனி, அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளிலும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலும் இதுவரை பதினேழு தமிழ் இணைய மாநாடுகளை நடத்தித் தமிழுக்கும் தமிழ்க் கணினி வளர்ச்சிக்கும் பலவகையிலும் துணைபுரிந்து வருகிறது. பேராசிரியர்கள் மு. அனந்தகிருட்டிணன், மு. பொன்னவைக்கோ, அப்பாசாமி முருகையன் (பிரான்சு), கு. கல்யாணசுந்தரம் (சுவிஸ்) மற்றும்வாசு அரங்கநாதன் (அமெரிக்கா) போன்றோர் இந்நிறுவனத்தைத் தொடர்ந்து வழிநடத்தி வருகின்றனர்.

இவ்வகையில் அண்ணாப் பலகலைக்கழகத்தில் நடக்கவிருக்கும்  18வது தமிழ் இணையமாநாட்டின் மையக் கருத்தாகத்“தானியங்கிக் கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடு” (Tamil Robotics and Language Processing) என இருக்கும் என இம்மாநாட்டுக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

தானியங்கிக்கருவிகளில் தமிழ்மொழிப் பயன்பாடுஎன்ற மாநாட்டு மையக்கருத்தின் நோக்கம்.  தமிழ்க்கணினி பயன்பாட்டில் வன், மென்பொருள்களைக்கொண்டு குறிப்பாகக் கண், செவியில் ஊனமுற்றோருக்கு அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகள், கல்வி,கற்றல், சமூகப் பணிகள் போன்றவற்றில் முழுமையாகப் பங்கேற்க வசதி செய்வதும் ஒரு நோக்கமாக இருக்கும்.

இத்துறையில் தொழில்நுட்ப முன்னேற்றங்களைக் குறித்துப் பலர் சிறப்புச் சொற்பொழிவும் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் படைக்கவுள்ளனர்.

இக்கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் சிறந்த தமிழ்க் கணினி நிரலுக்கோ இணையப் பக்கங்களுக்கோ சிறப்புப் பரிசு வழங்கப்பட்டு மாநாட்டு அரங்கில் சிறப்பு செய்யப்படும் எனவும் உத்தமம் மற்றும் அண்ணாப் பல்கலைக்கழக மாநாட்டு அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

இது தமிழ் மொழியியல் ஆய்வையும் தமிழ்க்கணினி ஆய்வையும் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்ல ஒரு பெரிய வாய்ப்பாக இருக்கும் என மாநாட்டுக் குழுவினர் அறிவித்தனர்.

மேலும் முன்பு நடைபெற்ற தமிழ் இணைய மாநாடுகளைப்போல் இம்முறையும் தமிழ்மொழியில் கணினிபயன்பாடு மற்றும் தகவல்தொழில்நுட்பம் (IT), தமிழில் இயற்கைமொழி செயலாக்கம் (Natural LanguageProcessing), கணினி உதவியுடன் தமிழ் மொழி கற்றல் – கற்பித்தல் (Computer-Aided Learning and Teaching of Tamil), தமிழ் இணையம் உள்ளடக்கம் (Tamil Internet), தேடு பொறிகள், பெரிய தரவுகளின் பகுப்பாய்வு (SearchEngines and “Big Data” analysis), மின்னூலகங்கள் (Digital Libraries), தமிழ் இணைய வளர்ச்சி மற்றும் மேலாண்மை (Tamil Web Development and Content Management) போன்ற தலைப்புகளிலும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

இம்மாநாட்டின் நிகழ்ச்சிகள் குழுவின் தலைவராகப் பென்சில்வேனியாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வாசு அரங்க நாதன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அண்ணாப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் ரஞ்சனி பார்த்தசாரதி, டீ.வி. கீதா மற்றும் ல. ஷோபா அவர்களும் இக்குழுவில் பங்குபெற்று மாநாட்டுக் கட்டுரைகளைத் தரப்படுத்தவும் சிறந்த கட்டுரைகளை நூலாக வெளியிடும் முயற்சியிலும் ஈடுபட முன்வந்துள்ளனர்.

இது பற்றிய மேலும் தகவல்களுக்கு  www.tamilinternetconference.org என்னும் இணையப் பக்கத்தில் அவ்வப்பொழுது அறிவிக்கப்படும் எனவும் மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.