சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, தன்னை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தியதற்காக தமிழ் இயக்குநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் ‘சமுதாயம்’ என்ற திரைப்படத்தின் இயக்குநராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார் சத்ய பிரகாஷ் .

சிறுமியை நடிக்க வைப்பதாகக் கூறி, சென்னை மதுரவாயலில் உள்ள தனது வீட்டிற்கு அவரை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், சத்ய பிரகாஷ் ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது தெரியவந்துள்ளது . இதையடுத்து அந்த நபர் இப்போது போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.