சென்னை:  அன்னைத்தமிழில் அரச்சனை என்பது கட்டாயமில்லை, விரும்புவோர் அர்ச்சனை செய்யலாம் என சென்னை மயிலை கபாலீசுவரர் கோவிலில் இன்று ஆய்வு செய்த  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு இன்று காலை ஆய்வு மேற்கொண்டு, சுவாமி தரிசனம் செய்தார். ஆய்வின் போது பக்தர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். கோவிலுக்கு வந்த அமைச்சருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  திருக்கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும் அரசாக திமுக அரசு  இருப்பதாக கூறியவர் வெயில்காலம் என்பதால, பக்தர்களின் வசதிக்காக வரிசையில் நிற்கும்போது வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க நீர் தெளிப்பான்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மோர், எலுமிச்சை பழ ரசம் வழங்க அறிவுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து கோயில்களிலும் அன்னைத்தமிழில் அர்ச்சனை திட்டத்தை செயல்படுத்துவது கடினமான காரியம் என்றவர், தொடர்ந்து அதற்கு முயற்சி செய்து வருகிறோம். அன்னைத்தமிழில் அர்ச்சனை என்பது கட்டாயமல்ல எனவும், விரும்புவோர் தரிசனம் செய்யலாம். கூறினார். தமிழ் அர்ச்சனை திட்டம் 47  கோவில்களில் உள்ளது. தொய்வில்லாமல் நடைபெற்று வருகிறது.  தற்போது, கபாலீசுவரர் கோயிலில் இரண்டு சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த திட்டம் வெற்றிகரமாக அமைந்தால் தொடர்ந்து விரிவுப்படுத்தப்படும் என்று கூறினார்.

தொடர்ந்து, செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.  சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான கேள்விக்க பதில் கூறிய அமைச்சர், அங்கு அதிகாரிகள் குழு  விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2019ம் ஆண்டுக்கு முன்புவரை கனகசபை தரிசனம் முறையாக நடைபெறவில்லை. கொரோனா தொற்றுக்கு பின்பு கனகசபை தரிசனம் முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்து அறநிலையத்துறை சார்பில் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் கனகசபை தரிசனம் செய்ய தீச்சகர்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலில் பெறப்பட்ட புகாரின்மீது இணை ஆணையர் மற்றும் துணை ஆணையர் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்குழு அளிக்கும் அறிக்கையின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் சிலை மாயமானது தொடர்பான கேள்விக்கு, அதுதொடர்பான  விசாரணையும் நடைபெற்று வருகிறது. யார் தவறு செய்திருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என  கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் இ.ஆ.ப, மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.த.வேலு அவர்கள், இணை ஆணையர்கள் திருமதி.த.காவேரி, திருமதி.ரேனுகாதேவி, ஆகியோர் கலந்து கொண்டனர்.