சென்னை

போக்குவரத்துத் துறை அமைச்சர் வரும் 19 ஆம் தேதி மீண்டும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

நேற்று முதல் ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் பேசியதை அடுத்து போக்குவரத்து போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது

அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம,

”தமிழக முதல்வரின் அறிவுரையை பெற்று தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளில் ஏற்கனவே 2 கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.  மீதமுள்ள கோரிக்கைகள் நிதி நிலையைப் பொறுத்து ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்  மீண்டும். வரும் 19 ஆம் தேதி போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும்.

எனத் தெரிவித்துள்ளார்