பெர்த்தில் இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வீழ்த்தியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வீரர்கள் கே எல் ராகுல் 9 ரன்களும், ரோஹித் சர்மா 15 ரன்களும், விராட் கோலி 12 ரன்களும் எடுத்து அவுட்டானார்கள்.

49 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து பரிதாபமான நிலையில் இருந்த இந்திய அணியை கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினார் சூர்யகுமார் யாதவ்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் 40 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார் இதனால் 20ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது இந்தியா.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்தது.

24 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற பரிதாப நிலையில் இருந்தபோது மார்க்ரம் மற்றும் மில்லர் ஜோடி சிறப்பாக விளையாடி 4வது விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்தனர்.

மார்க்ரம் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார், மில்லர் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா.