இந்தியா – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை டி20 போட்டி சிட்னியில் இன்று நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

20 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்த இந்திய அணியில் விராட் கோலி 62 ரன்களும், ரோஹித் சர்மா 53 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 51 ரன்களும் எடுத்தனர்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி களமிறங்கியது.

துவக்கம் முதலே விக்கெட்டுகளை இழந்த நெதர்லாந்து அணி இறுதியில் 9 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது.

புவனேஷ் குமார், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல்,, அஷ்வின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர் ஷமி ஒரு விக்கெட் எடுத்தார்.