புதுடெல்லி: ஐபிஎல் தொடர் சமயத்தில், பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கான டி-20 சாலஞ்சர்ஸ் தொடர் நிச்சயம் நடத்தப்படும் என்றுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.

இந்தியாவில், மகளிர் கிரிக்கெட் புறக்கணிக்கப்படுகிறது என்ற புகார் எழுந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது கவனம் பெற்றுள்ளது.

இந்தாண்டு செப்டம்பர் மாதம், இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் இங்கிலாந்து பயணம் கொரோனா காரணமாக ரத்தானது. இந்நிலையில், பெண்கள் கிரிக்கெட் அணிக்கான அடுத்தடுத்த தொடர்கள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், கங்குலி கூறியுள்ளதாவது; பெண்கள் அணிகளுக்கான ஐபிஎல் தொடர் நடத்தும் திட்டமுள்ளது. இந்தாண்டு நவம்பர் 1 முதல் 10ம் தேதிவரை, பெண்களுக்கான சேலஞ்சர்ஸ் தொடர் நடத்தப்படும். மற்றபடி, ஆண்கள் & பெண்கள் என்ற வேறுபாடின்றி, அவர்களின் உடல் நலனிற்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். அதில், ரிஸ்க் எடுக்கப்படாது” என்றார்.