சென்னை: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு, தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட ராம்குமார், மின்சாரத்தினால் இறக்கவில்லை என்று உடற்கூறாய்வு  தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சுவாதி கொலை வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராம்குமார் காவல்துறையினரால் சிறையில் கொல்லப்பட்டாரா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் எப்படி இறந்தால்? சிறைச்சாலையில், காவல்துறையினரால் அடித்து கொல்லப்பட்டாரா?  அவரது மரணம் எப்படி நிகழ்ந்தது எனசமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

சுவாதி கொலை கைதி: சிறையில் ராம்குமார் தற்கொலை!

2016ஆம் ஆண்டு ஜூன் 24ஆம் தேதி காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி என்ற இளம்பெண் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை விவகாரத்தில், க நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற பொறியியல் பட்டதாரியை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக அவரை கைது செய்ய  முயன்றபோது, அவர்  பிளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயன்றதாக  காவல்துறையினர் கூறி மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது கழுத்தில் 18 தையல்கள் போடப்பட்டது. உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் கூறினர். ஆனால், இதை ராம்குமாரின் பெற்றோர்கள் மறுத்தனர். இது சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக காவல்துறையினர், ராம்குமார் ஸ்வாதியை ஒரு தலையாக காதலித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அது குறித்து வேறெந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால் ராம்குமார் கைது செய்யப்பட்டதிலும் சர்ச்சை கிளம்பியது.

சுவாதியை தான் கொலை செய்யவில்லை :  ராம்குமார் ஜாமின் மனு தாக்கல்!

இந்த கொலை வழக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ள நிலையில், வழக்கும் கடந்த 5 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சுவாதி கொலை வழக்கை விசாரித்து வரும் மனித உரிமை ஆணையம், ராம்குமாரின் மரணம் குறித்தும் விசாரித்து வருகிறது. இதன்  விசாரணைக்கு ஆஜரான, மருத்துவர்கள்,  ராம்குமாரின் உடலில்  மின்சாரம் பாய்ந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறியுள்ளனர்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுவாதியை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு, தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட ராம்குமாரின் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவர்கள் 2 பேர் மனித உரிமை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். அவர்களின் வாக்குமூலம் வருமாறு,

சுவாதி, வெளிநாட்டு உளவாளியா? : ராம்குமார் தாயார் அதிர்ச்சி புகார்

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றிய போது 7.10.2016 அன்று ராம்குமார் உடன் உடற்கூறாய்வுக்கு வந்தது. அந்த  நபரின் மூளை மற்றும் இதர உறுப்புகள் திசு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.  இந்த பணியில் நானும் மருத்துவர் வேணு ஆனந்த் என்பவரும்  இருந்தோம். ஆய்வில், அந்த நபரின் உடலில் மின்சாரம் பாய்ந்ததற்கான அறிகுறி காணப்படவில்லை.

எங்களது பரிசோதனை அறிக்கையில், மூளை திசு பரிசோதனை செய்ததில் நல்ல நிலையில் இருந்தது. இதய திசுக்களை பரிசோதனை செய்ததில் அதுவும் நல்ல நிலையில் இருந்தது. நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், மேலுதடு, கீழுதடு, சிறுநீரகம் போன்றவற்றின் திசுக்களை பரிசோதனை செய்ததிலும், அவர் உடலில் மின்சாரம் பாய்ந்ததற்கான அறிகுறிகள் தென்படவில்லை. அனைத்து உறுப்புகளும்  நல்ல நிலையில் இருந்ததாக சான்று வழங்கி இருக்கிறோம். அதற்காக நாங்கள் வழங்கிய சான்று நகல் தான் சி4 ஆகும் என்று அதை காண்பித்துள்ளனர்.

இந்த விவகாரம் தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. உண்மையிலேயே சுவாதியை கொலை செய்தது ராம்குமார்தானா? அப்படியென்றால் அதற்கான ஆதாரங்களை காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லையே ஏன்?  ராம்குமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாக காவல்துறையினர் கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கை, அவரது மரணம் மின்சாரத்தில் நடைபெறவில்லை என்று தெரிவித்து உள்ளது. அப்படியென்றால், ராம்குமார், சிறையில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்டரா? என்று அடுக்கடுக்கான கேள்விகளை சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.

சுவாதி கொலை முதல் ராம்குமார் மரணம் வரை..: ஒரு டீட்டெய்ல் ரிப்போர்ட்..