நெய்வேலி:
நெய்வேலியில் செயல்பட்டு வரும் அனல்மின் நிலையித்தில் கொதிகலன் வெடித்து சிதறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

என் எல் சியில் உள்ள இரண்டாவது அனல்மின் நிலையத்தில் இருந்த  பாய்லர் வெடித்ததில் 7 தொழிலார்கள்  படுகாயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பாய்லர் வெடிப்பால் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும், இதன் காரணமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.