திரையரங்குகள் திறக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படாத நிலையில், படப்பிடிப்பு முடிந்து தணிக்கை சான்றிதழும் பெற்ற தமிழ் திரைப்படங்கள் ஓ.டி.டி. ( ஆன் லைன்) தளத்தில் ரிலீஸ் ஆகி வருகின்றன.
ஊரடங்கு காலத்துக்கு முன்பு சின்ன பட்ஜெட் படங்கள் மட்டுமே ஓ.டி.டி.யில். வெளியானது.

இந்த நிலையில் பெரிய பட்ஜெட் படங்கள் ஓ.டி.டி. தளத்தில் நுழைவதற்க்கு ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் பிள்ளையார் சுழி போட்டது.

ஜோதிகாவின் கணவர் சூரியா நடித்துள்ள ‘’சூரரை போற்று’’ கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதியே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும்.
படத்துக்கு சென்சார் சர்டிபிகேட் பெற்று, அதன் தயாரிப்பாளர் திரையரங்குகள் திறப்பதற்காக, மாத கணக்கில் காத்திருந்தது தான், மிச்சம்.

வேறு வழி இல்லாமல், ’சூரரை போற்று ‘ படத்தை அமேசான் பிரைம் தளத்தில் வெளியிட முடிவு செய்து விட்டார்.
இந்த படத்தை 50 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் வாங்கியுள்ளதாக தெரிகிறது.

’சூரரை போற்று படத்தை ஒருக்காலும் ஓ.டி.டி.யில் ரிலீஸ் செய்ய மாட்டோம்’’ என படக்குழுவும், சூரியாவும் கூறி வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக இந்த படம் ’ஆன்லைனில் ‘ வெளியிட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

-பா.பாரதி.