1994ஆம் ஆண்டு பாதுகாப்பு ரகசியங்களை உளவு பார்த்ததாக நம்பி நாராயணையை மத்திய புலனாய்வுத் துறை தவறுதலாக கைது செய்தது. பின்னர் 1998ஆம் ஆண்டு அவர் மீது எந்த தப்பு இல்லை என்று உச்ச நீதிமன்றம் இவரை விடுதலை செய்தது. அதோடு பொய் வழக்கைப் போட்டதால் கேரளா காவல்துறை நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் கொடுத்திருந்தது.

அந்த சிறை அனுபவத்தை Ready to fire: How India and I survived the ISRO spy case’ என்று நாராயணன் புத்தகமாக வெளியிட்டிருந்தார்.

அந்த புத்தகத்தைத் தழுவிய கதை தற்போது படமாக தயாராகி வருகிறது. இதை மாதவன் இயக்குவது மட்டுமின்றி மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். மேலும் 17 ஆண்டுகளுக்கு பின் மாதவன் சிம்ரனுடன் இணைந்து நடிக்கிறார்.

இந்தப்படம் இந்தி, தமிழ், ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் உருவாகி வரும் இதில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடரில் நடித்த ரான் டொனச்சியும், டௌண்டன் அப்பே தொடரில் நடித்து பிரபலமான பிள்ளிஸ் லோகனும் இணைந்து நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மாதவன் நடிக்கும் நம்பி நாராயணன் கதாபாத்திரம் தனது முற்கால கதையை சூர்யாவிடம் கூறுவது போல 🎞திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.