தஞ்சை பெரிய கோயில் பற்றிய ஜோதிகாவின் கருத்துக்கு எழுந்த விமர்சனங்களுக்கு அவரது கணவர் நடிகர் சூர்யா பதில் அளித்துள்ளார்

மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கான காணிக்கை என்பதை பல பெரியவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்

நல்லோர் சிந்தனைகளை செவி கொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரியாது

பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் இறைவன் இருக்கும் இடமாக கருத வேண்டும்

கொரோனா பாதிப்பு காலத்தில் ஜோதிகாவுக்கு கிடைத்த ஆதரவு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது

நல்ல எண்ணங்களை விதைத்து, நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வெளிப்பட்டுள்ளது

ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக உள்ளோம்

ஜோதிகா எப்போதோ பேசியதை இப்போது பெரிதாக்குவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சூர்யா.

மேலும் கோவில்களை போலவே மருத்துவமனைகளை உயர்வாக கருத வேண்டும் என்றார் ஜோதிகா

ஜோதிகா கூறிய கருத்தை விவேகானந்தர் போன்றோரும் ஏற்கனவே கூறியுள்ளனர்

கோவில்களுக்கு காணிக்கை செலுத்துவதுபோல் மருத்துவமனைகளுக்கு உதவ வேண்டும் கூறியிருந்தார் ஜோதிகா

மதங்களை கடந்த மனிதமே முக்கியம் என்பதை எங்கள் பிள்ளைகளுக்கு போதிக்கிறோம்

ஊடகங்கள் சரியான விதத்தில் இச்சர்ச்சையைக் கையாண்டன என நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார் .