சென்னை:
தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்குப் பொருட்கள் வாங்குவதற்காக தி.நகரில் பொதுமக்களின் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இந்நிலையில்,  தீபாவளியை முன்னிட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், ட்ரோன்கள் மூலமாகவும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.