ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டாண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

‘மோடி குடும்பப்பெயர்’ குறித்து அவதூறாக விமர்சித்தாக, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது குஜராத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு தடை விதிப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.