புதுடெல்லி:
வதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு அளிக்கப்பட்ட தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2019 ம் ஆண்டு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி குடும்ப பெயர் குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குஜராத் மாநிலத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் விதித்த 2 ஆண்டு சிறைத்தண்டனையை குஜராத் உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

கிரிமினல் அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்க மறுத்த குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு மீதுஉச்சநீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து, மனு தொடர்பாக, குஜராத் அரசு மற்றும் ராகுல்மீத அவதூறு வழங்கு தொடர்ந்த புகார்தாரரும் குஜராத் பாஜக எம்எல்ஏவுமான பூர்ணேஷ் மோடிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது

இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய மறுத்து விட்டது. இதையடுத்து, 2 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்திருந்தார்.

இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச 2 ஆண்டு சிறை தண்டனை குறித்த விளக்கம் இல்லை என கூறி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.