டெல்லி: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யும் வகை யில், தமிழ்நாடு வெளியிட்ட  அரசாணை தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை 2024ம் ஆண்டு  ஜனவரி 25ந்தேதிக்கு  ஒத்திவைத்தது.

ஏற்கனவே இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆகமக் கோயில்களில் 2,400-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு அனைத்து சாதிகளைச் சேர்ந்த பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை நியமிப்பதில் தமிழகத்தை நிலைநிறுத்த வேண்டும். ஆகம மரபுகளின்படி தமிழகம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கூறிய நீதிமன்றம் தமிழ்நாடு அரசின் ஆணைக்கு தடை விதித்து 2023ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி  உத்தரவிட்டது. இந்த உத்தரவை  உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கும் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணை குறித்து எந்தவித கருத்து கூறவோ அல்லது தற்போது அதற்கு தடை விதிக்கவோ முடியாது என தெரிவித்துள்ள  நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘அர்ச்சகர்களை’ நியமிக்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு என்ற தமிழக அரசின் சமர்ப்பிப்புகளை முதன்மையான பார்வைக்கு ஏற்கவில்லை என்று கூறியது.வழக்கு விசாரணையை ஜனவரி 25ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பிரபலமான கோயில்களை அரசு, அறநிலையத்துறையின் கீழ் எடுத்து பராமரித்து வருகிறது. பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து கிடைக்கும் வருமானங்களை பல்வேறு திட்டங்களுக்கு செலவழித்து வருகிறது. மேலும்,  கோயில்களில் அர்ச்சகர்களாக அனைத்து சாதியினரும் பணிபுரியும் வகையில்,  அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யும் வகையில்,  அரசாணை வெளியிட்டு, அதற்கான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி அளித்து அர்ச்சராக பணி நியமனம் செய்து வருகிறது.

இதற்கு ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அனைத்திந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் உட்பட சில அமைப்புகள் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவில், ஆகம விதிகளுக்கு முரணாக கோயில்களில் அர்ச்சகர்கள் மற்றும் பிற ஆகம சம்பந்தப்பட்ட பணியாளர்களை நியமிக்கவோ அல்லது தேர்வு செய்வதையோ சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று   கோரப்பட்டது.

இந்த மனுமீதான விசாரணை உச்ச நீதிமன்றநீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ்  அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று (8ந்தேதி) நடைபெற்ற விசாரணையின்போது,  மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ”ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் அர்ச்சகர் நியமனம் ஆகியவற்றில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை தமிழ்நாடு அரசு மீறி வருகிறது. மேலும் கடந்த 50ஆண்டுகளாக இருக்கும் ஆகம வழக்கத்தை மாற்றி விட்டு எப்படி புதிய விதிமுறைகளை கோயில் விவகாரத்தில் மேற்கொள்ள முடியும். மேலும் இது எங்களது அடிப்படை உரிமையாகும்.  அதனால் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும்,  இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றியமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த  தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன்,  ‘‘இந்த விவகாரத்தில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப் படுகிறது. இதுகுறித்து முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் பதில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசாணையின்படி அர்ச்சகர் களை நியமனம் செய்ய எந்தவித தடையும் விதிக்க கூடாது. மேலும் இதுதொடர்பான பல்வேறு வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திலும் விசாரணை நிலுவையில் இருந்து வருகிறது. இதில் குறிப்பாக தமிழ்நாடு சார்ந்த அனைத்து விவரங்களையும் உயர்நீதிமன்றத்திற்கு நன்றாக தெரியும் என்பதால் வழக்கை உயர்நீதிமன்றமே தொடர்ந்து விசாரிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவித்தார்.

இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆகம மரபுப்படி நிர்வகிக்கப்படும் கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு செப்டம்பர் 25ம் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. (செப்டம்பர் 25 அன்று, ‘அர்ச்சகர்கள்’ நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, இது மாநில அரசின் கூற்றுப்படி மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் 2405 ‘அர்ச்சகர்கள்’ நியமனம் நிறுத்தப்பட்டது.)

‘‘இந்த விவகாரத்தில் தற்போது எந்தவித கருத்தை கூறவோ அல்லது தடை விதிக்கவோ நாங்கள் விரும்பவில்லை. ‘அர்ச்சகர்களை’ நியமிக்க தமிழக அரசுக்கு உரிமை உண்டு என்ற தமிழக அரசின் சமர்ப்பிப்புகளை முதன்மையான பார்வைக்கு ஏற்கவில்லை என்று கூறிய  நீதிபதிகள், ‘ஆகமங்கள்’ என்பது இந்து பள்ளிகளின் தாந்த்ரீக இலக்கியங்களின் தொகுப்பாகும், மேலும் அத்தகைய நூல்களில் மூன்று கிளைகள் உள்ளன – ‘சைவ, வைஷ்ணவம் மற்றும் சாக்தம்’ என்று விளக்கம் அளித்தது.

ஆனால், தமிழகஅரசு வழக்கறிஞர்,. ‘அர்ச்சகர்கள்’ நியமனத்தில் பரம்பரை நிர்வாகம் தலையிட முயல்வதாகக் கூறி, தமிழக அரசின் ஜூலை 27ஆம் தேதி பிறப்பித்த உத்தரவையும், அதன் தொடர்ச்சியாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும்,  பெஞ்ச், இதேபோன்ற பிரச்சினையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப் போவதில்லை என்று கூறியதுடன், வாக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 25, 2024 ஒத்தி வைத்தது. அன்றைய தினம்,   இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக மனுதாரர்கள் தரப்பில் அங்கு தெரிவிக்கலாம் என  நீதிபதிகள் கூறினர்.