சென்னை: வரும் 21-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

2024ம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்ற தேர்தல்  நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி உள்ளன.  அனைத்துக் கட்சிகளும் பூத் கமிட்டி அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில்,  அ.தி.மு.க. பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அ.தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வரும் 21.11.2023 மாலை 4 மணிக்கு, பூத் கமிட்டி; இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்தியதற்கான களப்பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர்கள்; மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.