டெல்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்த வழக்கிலும் உச்சநீதி மன்றம், ப.சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. இதனால் 106 நாட்கள் சிறை வாசத்துக்கு பிறகு, இன்று அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. பின்னர் அதே வழக்கில், அமலாக்கத்துறையும் கைது செய்தது.

இதனால், சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமின் கிடைத்தும், அவர் சிறையைவிட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், அமலாக்கத்துறை வழக்கிலும் உச்சநீதி மன்றம் இன்று ஜாமின் வழங்கி உள்ளது.

தீர்ப்பில், சிறப்பு நீதிபதியின் அனுமதியின்றி ப.சிதம்பரம் நாட்டை விட்டு வெளியேற கூடாது, சிதம்பரம் சாட்சியங்களை கோபப்படுத்தக்கூடாது, சாட்சிகளை பாதிக்கக்கூடாது என்றும், இந்த வழக்கு தொடர்பாக அவர் பத்திரிகை நேர்காணல்களை வழங்கவோ அல்லது பகிரங்க அறிக்கைகளை வெளியிடவோ கூடாது என்று நிபந்தனைகளை விதித்துள்ளது.

இதன் காரணமாக 106 நாட்கள் சிறைவாசத்தை கடந்து சிதம்பரம் இன்று வெளியே வருகிறார்.