டெல்லி: சட்டவிரோ பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 5 மாதமாக சிறையில் உள்ள  செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை  உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள திமுக அமைச்சர்  சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார் இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், ஆகஸ்ட் 12ஆம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மேலும், குற்றவாளியான செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க திமுக அரசு தயங்கி வருகிறது. மேலும், செந்தில்பாலாஜியின் தம்பி கடந்த சில மாதங்களாக தலைமறைவாக உள்ளார். இதனால், அவரது ஜாமின் மனு மாவட்ட நீதிமன்றம்  தள்ளுபடி செய்யப்பட்டது. அவரது காவல் மேலும் மேலும் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் இன்னும் தலைமறைவாக இருப்பதால், சாட்சிகளை கலைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும், செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதால், ஜாமீன் வழங்க முடியாது” எனக் கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து, செந்தில்பாலாஜி தரப்பில் , உச்ச நீதிமன்றத்தில் ல் ஜாமீன் கோரி வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா அமர்வில், விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தொடர்பான  வழக்கில், தொடர்ந்து பல்வேறு ஆவணங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனம் அமலாக்கத்துறை  எதிர்ப்பு தெரித்தது.

இந்த வழக்கில் இன்று  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா அமர்வு தீர்ப்பு வழங்கியது.  உடல்நல குறைவுக்காக ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்து, கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்ய அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனுவை வாபஸ் பெற அனுமதிக்கக் கோரி முறையீடு செய்யப்பட்டது. முறையீட்டை ஏற்ற உச்ச நீதிமன்றம் மனுவை வாபஸ் பெற அனுமதி வழங்கியது.