டில்லி:

பாலியல் தொடர்பான போக்சோ வழக்குகளை விசாரிக்க  மாவட்டந்தோறும் தனி நீதிமன்றங்கள் அமைக்Fகும்படி உச்சநீதி மன்றம் மத்தியஅரசுக்கு  அறிவுரை கூறி உள்ளது.

நாடு முழுவதும் பாலியல் தொடர்பான வழக்குகள் பெருகி வரும் நிலையில், இது தொடர்பான வழக்கில் உத்தரவிட்ட உச்சநீதி மன்றம், நூற்றுக்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இந்தியாவில் பாலின வித்தியாசமின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில்,  2012ஆம் ஆண்டு  போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி,  18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர்.

பாலியல் வல்லுறவு, பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல், பாலியல் சீண்டல், பாலியல் அத்துமீறல்/வரம்புமீறல், ஆபாசப் படமெடுக்க குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றை குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது.

இது தொடர்பாக கைது செய்யப்படுபவர்கள்,  வழக்கின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை புகார் கொடுப்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது, விசாரணை, வாக்கு மூலம் பதிவுசெய்வது, வழக்கு நடப்பது போன்ற அனைத்திலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனே மையமாக இருக்க வேண்டும் என இச்சட்டம் வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டு உள்பட பெரும்பாலான மாநிலங்களில் போக்சோ வழக்குகள் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதனால், அதிருப்தி அடைந்த உச்ச நீதிமன்றம் 100-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 60 நாட்களுக்குள் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்  மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

சமீப காலமகா பாலியல் குற்றங்கள் பெருகி வருவதாகவும்,. மாவட்டந்தோறும் 60 நாட்களில் 100 போக்சோ வழக்குகள் பதிவாகி வருவதாகவும் வேதனை தெரிவித்த நீதிபதிகள்,  இரண்டு மாதங்களுக்குள் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்து விசாரணையை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.