டில்லி

ஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து தமிழகம், பஞ்சாப் , கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஆளுநருக்கும் அந்த மாநில அரசுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அந்த மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல், அதை கிடப்பில் போடுவதாக மேற்கூறிய மாநில அரசுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.

ஆளுநரின் இத்தகைய செயல்பாடுகளுக்கு எதிராகத் தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளன. இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன.

பஞ்சாப் மாநில ஆளுநருக்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட்,

“தயவு செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் மசோதாக்களின் போக்கை மாற்ற வேண்டாம். ஆளுநரின் இந்த விவகாரம் கவலைக்குரியது. ஆளுநர் நெருப்புடன் விளையாடுகிறார்.  

எங்களுக்கு தற்போது பஞ்சாப்பில் நடைபெறுவது கடும் கவலை அளிக்கிறது. மாநிலத்தில் சட்டசபை கூட்டத் தொடர் முடிந்துவிட்டது என்பதாலேயே மசோதாக்களுக்கு ஒப்புதல் தரமாட்டேன் என்பது எப்படிச் சரியாகும்? “

என வினா எழுப்பினார்.