கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இது தொடர்பாக திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய வீடுகள், மண்டபங்கள் உள்ளிட்டவற்றை அரசின் பயன்பாட்டுக்குக் கொடுத்து வருகிறார்கள்

அந்த வகையில் தற்போது சன் டிவி நிறுவனம் 10 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது. சன் குழுமத்தின் 6,000-க்கும் அதிகமான பணியாளர்கள், தங்கள் ஒரு நாள் சம்பளத்தை நிதியாகக் கொடுக்க முன் வந்துள்ளனர்.

இந்த ரூ.10 கோடி, பல்வேறு வகையில், இந்தியாவின் பல மாநிலங்களில் பிரித்து வழங்கப்படவுள்ளது.