பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் என்கிற நிறுவனத்தின் மூலம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களை தயாரித்து வருபவர் நடிகை நிரோஷா ராதா. இவர், மீடியா கிரிக்கெட் சாம்பியன்ஷிப் என்கிற பிரமாண்ட கிரிக்கெட் நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை (30.04.22) அன்று போரூரில் நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
திரைப்பட மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பங்குபெற்ற. இந்த டென்னிஸ் பால் விளையாட்டு போட்டியில் விஜய் டிவியிலிருந்து மாகாபா, சித்தார்த், சன் டிவியிலிருந்து ஆர்யன், அசார் மற்றும் கோலிசோடா புகழ் கிஷோர் ஆகியோர் நட்சத்திர அணிகளை வழி நடத்தினர்.
சென்னை சூப்பர் ஸ்டார்ஸ், சன் சூப்பர் ஹீரோஸ், பீஸ்ட் பிளேயர்ஸ், சில்க் ஸ்மிதா, மாஸ்டர் பிளாஸ்டர்ஸ் மற்றும் ஒயிட் வாக்கர்ஸ் என்கிற 6 அணிகளுக்கிடையே 1௦ ஓவர்கள் கொண்ட போட்டியாக இது நடைபெற்றது.
இறுதிப்போட்டியில் மாகாபா தலைமையிலான சில்க் ஸ்மிதா அணியும், அசார் தலைமையிலான சன் சூப்பர் ஹீரோஸ் அணியும் மோதின. 90 நிமிடங்கள் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மோதலில் 14 ரன்கள் வித்தியாசத்தில் சன் சூப்பர் ஹீரோஸ் அணி வெற்றி பெற்று கோப்பையையும் 1.5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையையும் கைப்பற்றியது.
சன் சூப்பர் ஹீரோஸ் அணியின் .அஜய்க்கு ‘மேன் ஆப் தி மேட்ச்’ பட்டம் அறிவிக்கப்பட்டதுடன் டெஸ்லாட் நிறுவனத்திடமிருந்து ஒரு கிக் ஸ்டார் சைக்கிளையும் பரிசாக பெற்றார்.
சில்க் ஸ்மிதா அணியை சேர்ந்த சுஜித் ‘மேன் ஆப் தி சீரிஸ்’ ஆக அறிவிக்கப்பட்டதுடன் சத்யா ஹோம் அப்ளையன்ஸ் நிறுவனத்தின் சார்பாக எல்ஜி குளிர்சாதன பெட்டி ஒன்றும் அவருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் டைட்டில் ஸ்பான்சர்களான மார்க் அணியின் திரு.மோகன் மற்றும் திரு சரவணன், யுவர் பேக்கர்ஸ் ஸ்பான்சரான திரு கிருஷ்ண ராஜூ ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினார்களாக கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றவர்களுக்கும் பரிசுக்கோப்பை, பரிசுத்தொகை மற்றும் பரிசுப்பொருள்களை வழங்கி சிறப்பித்தனர்.