சென்னை

இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய தற்கொலைக் கடிதம் கிடைத்துள்ளது.

இன்று பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அதிகாலை 3 மணியளவில் வீட்டில் உள்ள தனது அறையில் மின் விசிறியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையின்  முதற்கட்ட விசாரணையில் அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து,அவரது உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் டிடிகே சாலையில் உள்ள விஜய் ஆண்டனியின் இல்லத்தில் பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

திரைத்துறை பிரமுகர்கள்  விஜய் ஆண்டனியின் மகள் மறைவுக்கு அஞ்சலி தெரிவித்து வருகின்றனர். இதுவரை நடிகர்கள் சிம்பு, பரத், கார்த்தி, நிழல்கள் ரவி, சதீஷ், பார்த்திபன், சத்யராஜ், லிவிங்ஸ்டன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி உள்ளனர்  அவர் உடல் நாளை காலை கீழ்ப்பாக்கத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

விஜய் ஆண்டனியின் மகள் எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.  கடிதத்தில் “Love you all… Miss you all என தொடங்கி 10 வரிகளில் ஆங்கிலத்தில் எழுதியுள்ளதாக காவல்துறையினர் கூறி உள்ளனர்.

மேலும் கடிதத்தில் “ எனது நண்பர்களையும், ஆசிரியர்களையும் நான் மிஸ் செய்வேன். நான் இல்லாமல் எனது குடும்பம் தவிக்கும். நானும் எனது குடும்பம் இல்லாமல் தவித்துப் போவேன்.” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.