சென்னை

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மிகப் பெரிய மாற்றங்களை உருவாக்கும் எனக் கூறி உள்ளார்.

இன்று நாடாளுமன்ற மக்களவையில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று புதிய நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் அவை கூடியதும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டத்துறை மந்திரி அர்ஜுன்ராம் மெஹ்வால் தாக்கல் செய்தார். நாளை மக்களவையில் மசோதா மீது விவாதம் நடைபெற உள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர். கனிமொழி,-

”இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா செயல்படுத்தப்பட்டால் நிச்சயமாக மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கும். ஆனால் இந்த மசோதாவைக் கொண்டு வருகிறோம் என்று சொல்லிவிட்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்கு பிறகுதான் செயல்படுத்துவோம் என்பது கண்துடைப்பு போல் உள்ளது.

தேர்தலுக்காக இந்த மசோதாவைக் கொண்டு வந்ததாகத் தெரியவில்லை,  ஆயினும் தேர்தல் நேரத்தில். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவைக் கொண்டு வந்து விட்டோம், பெண்களுக்காக நாங்கள் இவ்வளவு பெரிய விஷயத்தை செய்திருக்கிறோம் என்று அறிவித்து வாக்கு வங்கிக்காக மசோதாவைக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

என்று கூறி உள்ளார்.