சென்னை

ரும் 22 ஆம் தேதி நடிகர் விஷால் மீண்டும் நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ரம் உத்தர்விட்டுள்ளது. 

பிரபல நடிகர் விஷால், தன்னுடைய படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரியின் படத்தயாரிப்புக்காக அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.21.29 கோடி கடன் கேட்டிருந்தார். லைகா நிறுசனம்  இந்த பணத்தை லைகா நிறுவனம் செலுத்தி இருந்தது. விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் பணத்தைத் திருப்பி செலுத்தும் வரையில், லைகா நிறுவனத்திடம் வழங்கப்படுவதாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

விஷாலின் படத்தயாரிப்பு நிறுவனம் பணத்தைக் கொடுக்காமல் வீரமே வாகை சூடும் திரைப்படத்தைத் திரையில் வெளியிட முயற்சி செய்ததையடுத்து தொகையைச் செலுத்தாமல் ‘வீரமே வாகை சூடும்’ படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓ.டி.டி. உரிமையை விற்கவும் தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இதை எதிர்த்து விஷால் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டது. அந்த தொகையைச் செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்குகள் அல்லது ஓ.டி.டி. தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு கடந்த 8-ந்தேதி விசாரணைக்கு வந்த போது, உயர்நீதிமன்ற உத்தரவின்படி நடிகர் விஷால் 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருப்பதாக லைகா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தைச் செப்டம்பர் 15-ந்தேதி வெளியிடத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு செப்டம்பர் 12-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நடிகர் விஷாலுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

நடிகர் விஷால் கடந்த முறை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தபோது விஷால் தரப்பில், நீதிமன்ற உத்தரவை அவர் மீறவில்லை என்றும், இந்த பிரச்சினைக்கு மத்தியஸ்தர் ஒருவரை நியமித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

நீதிபதி, நடிகர் விஷால் கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடந்த 13-ந்தேதி வரையிலான தனது வங்கிக் கணக்கு பரிவர்த்தனைகள் குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை 19-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்புக்கும், நடிகர் விஷாலுக்கும் தொடர்பு இல்லை என்பதால், அந்த படத்தை வெளியிட அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அடுத்த விசாரணையின் போது நடிகர் விஷால் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இன்று இந்த வழக்கு மீண்டும் நீதிபதி பி.டி.ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகவில்லை. அதேசமயம், நான்கு வங்கிக் கணக்குகளின் விவரங்கள் மற்றும் அசையும் மற்றும் அசையா சொத்தின் விவரங்களின் ஆவணங்களை விஷால் தரப்பில் தாக்கல் செய்யாததால் நடிகர் விஷால் வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.

பிற்பகல் நடிகர் விஷால் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு வந்து விஷால் நேரில் ஆஜராக விலக்களிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். நீதிபதி இந்த கோரிக்கையை ஏற்க மறுத்து நடிகர் விஷால் வரும் 22-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.