சென்னை:

ரும் 19ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கரும்பு விவசாயிகளின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சட்ட இயக்கம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கரும்பு விவசாயிகள், போதிய மழை இன்மை மற்றும், ஆலைகளுக்கு வழங்கப்படும் கரும்புகளுக்கு சரிவர பணம் பட்டுவாடா செய்யாமை போன்ற காரணங்களால் வாழ்விழந்து வருகின்றனர்.

இந்த நிலையில், கரும்பு விவசாயிகளின் அவல நிலையை அரசுக்கும் மக்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில, கரும்பு விவசாயிகளின் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே  வரும் 19 – 09 – 2019 வியாழன் காலை 9.30 மணி முதல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சட்ட இயக்கம் நிறுவனத் தலைவர் முனைவர் அஷோக் ஜி. லோதா தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  நமக்காக தன் வாழ்நாள் முழுதும் உழைத்து தற்போது கடும் சிரமங்களை சந்தித்து வரும் விவசாய சகோதரர்களின் அவல நிலையை அனைவருக்கும் எடுத்துச் செல்வோம்…

அனைவரும் ஒன்றுகூடி குரல் கொடுத்து, மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல குரல் கொடுக்க வர வேண்டுகிறோம் என்று தெரிவித்து உள்ளார்.