சென்னை

கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதுக்குச் சுப. வீரபாண்டியனும், அம்பேத்கர் விருதுக்கு பி சண்முகமும் தேர்வு செய்யபட்டுள்ளனர். 

தமிழக அரசு கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 0சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது’ வழங்கி வருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடுபட்டு வரும் தமிழகத்தை சேர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு ஆண்டுதோறும் ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ வழங்கி வருகிறது. இந்த விருதைப் பெறுவோருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

கடந்த, 2023ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது மற்றும் அம்பேத்கர் விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2023ம் ஆண்டிற்கான சமூகநீதிக்கான “தந்தை பெரியார் விருது”க்கு சமூக நீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப. வீரபாண்டியன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் 2023-ஆம் ஆண்டிற்கான “டாக்டர் அம்பேத்கர் விருது” க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்

இவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை விருதுகளை வழங்கி கவுரவிக்க உள்ளார்.