தென்னிந்திய சண்டை இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் துணை தலைவராக பதவி வகித்து வரும் ஸ்டண்ட் இயக்குநர் தவசிராஜ் சங்கத்தின் தலைவரான சோமசுந்தரத்தை தாக்க முயன்றதால் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், நேற்று சென்னை வடபழனியில் நடைபெற்ற சங்க செயற்குழு கூட்டத்தில் தவசிராஜ் மீது எழுந்த புகார்கள் குறித்து பேசப்பட்ட போது அவர் திடீரென்று வெளியே சென்று பெட்ரோலை தன் உடல் மீது ஊற்றுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர் . இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.