சென்னை

மாணவர்களிடையே பொறியியல் கல்லூரிகளில் சேர ஆர்வம் மிகவும் குறைந்துள்ளது.

தமிழக பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது.

தற்போது நடந்து வரும் கலந்தாய்வு இரு கட்டங்களாக நடைபெற உள்ளது.

இதில் கல்ந்துக் கொள்ள 75,706 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் தற்போது பொறியியல் கல்விக்கு மாணவர்கள் இடையே மவுசு குறைந்துள்ளது.

இதனால் மாணவர்கள் பொறியியல் கல்லூரியில் சேர ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

இது வரை சிறப்பு மற்றும் பொதுப்பிரிவு கலந்தாய்வுகளில் 21,422 இடங்கள் மட்டுமே நிரம்பி உள்ளது.